மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: பர்மிங்காமில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! 

லண்டன் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பர்மிங்காமில் இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2017, 7:52 am

DIN

பர்மிங்காம்: லண்டன் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பர்மிங்காமில் இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அதில் இன்றைய போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளன. 

இந்நிலையில் லண்டனில் நேற்று லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட  பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பயங்கரவாத தாக்குதல்கள்  நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து  இன்று நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் விளையாட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பர்மிங்காம் நகரில் இந்திய அணி தங்கியிருக்கும் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.