பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையுடன் தோனியின் புகைப்படம்: சமூக வலைதளங்களின் 'லேட்டஸ்ட்' வைரல்!  

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மதியம் மோத உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பாஸ் அகமதுவின் குழந்தையுடன்...
பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையுடன் தோனியின் புகைப்படம்: சமூக வலைதளங்களின் 'லேட்டஸ்ட்' வைரல்!  
Published on
Updated on
1 min read

லண்டன்: ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மதியம் மோத உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பாஸ் அகமதுவின் குழந்தையுடன், இந்திய வீரர்  தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட் உலகின் மிக முக்கிய  மோதல்களில் ஒன்றாக கருதப்படும், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்க உள்ளது. இன்று மாலை துவங்க உள்ள இந்த போட்டிக்காக பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரசிகர்களிடையே ஆக்ரோஷம் நிலவும் இந்த சூழலில் பாகிஸ்தான் கேப்டன் சர்பாஸ் அகமதுவின் ஆண் குழந்தையை, இந்திய வீரர் தோனி  தன் கையில் தூக்கி வைத்தபடி நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பெரும்பாலான ரசிகர்கள் ஆவளுடன் பகிர்ந்து வரும் இந்த  புகைப்படமானது தற்பொழுது சமூக வலைதளங்களில்  வைரலாகப் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com