முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

முதல்முறையாக தேசிய பாட்மிண்டன் போட்டியில் மோதும் சிந்து - சாய்னா!

பட்டம் வெல்லும் ஆட்டத்தில் சாய்னா-சிந்து பலப்பரீட்சை நடத்துகின்றனர்...

News image
Updated On :8 நவம்பர் 2017, 5:57 am

எழில்

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 82-ஆவது சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஒன்றில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா, போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த அனுரா பிரபுதேசாயை 21-11, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மற்றொரு அரையிறுதியில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 17-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் ருத்விகா ஷிவானியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

இதையடுத்து, பட்டம் வெல்லும் ஆட்டத்தில் சாய்னா-சிந்து பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இதில் சாய்னா 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகும், சிந்து 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகும் தேசிய பாட்மிண்டனில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் இருவரும் இருமுறை மோதினாலும் தேசிய பாட்மிண்டன் போட்டியில் முதல்முறையாக இருவரும் மோதுவதால் இந்தப் போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சர்வதேசப் போட்டிகளில் இருவரும் இருமுறை மோதி அதில் ஆளுக்கு ஒரு வெற்றி பெற்றுள்ளார்கள். 

இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் 21-16, 21-18 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்-ஐ வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஹெச்.எஸ்.பிரணாய் 21-14, 21-17 என்ற செட் கணக்கில் சுபாங்கர் தேசாயை வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்ரீகாந்த்-ஹெச்.எஸ்.பிரணாயும் மோதும் போட்டி மதியம் 2.45 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இன்று மாலை 6 மணி அல்லது அதற்குப் பிறகு சாய்னா - சிந்து மோதும் இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.