ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

22 வருடங்களுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!

194 கிலோ எடையைத் தூக்கி உலக சாதனை படைத்துத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்...

News image
Updated On :30 நவம்பர் 2017, 10:11 am

எழில்

பளு தூக்குதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மிராபாய் சானு உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியாவின் 23 வயது மிராபாய் சானு, மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று, ஸ்னாட்ச்-ல் 85 கிலோ, கிளீன் & ஜெர்க்-ல் 109 கிலோ என மொத்தமாக 194 கிலோ எடையைத் தூக்கி உலக சாதனை படைத்துத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மிராபாய், கண்ணீருடன் பதக்கத்தைப் பெற்றார். காரணம், கடந்த வருடம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் படுதோல்வி அடைந்தார். அதற்குப் பிறகு தற்போது உலக சாதனை படைத்துத் தங்கமும் பெற்றதால் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

22 வருடங்களுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி, 1994, 95 வருடங்களில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளீல் 54 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கங்கள் வென்றார். அதன்பிறகு, மிராபாய் சானு தற்போது தங்கம் வென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.