மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

'புக் கிரிக்கெட்' விளையாடிய சிஎஸ்கே வீரர்களின் விடியோ

பள்ளிப் பருவத்தில் வகுப்பறையில் விளையாடும் புக் கிரிக்கெட் விளையாட்டை சிஎஸ்கே வீரர்களும் முயற்சி செய்தனர். இந்த போட்டியின் போது......

News image
Updated On :7 ஏப்ரல் 2018, 9:44 am

2018-ம் ஆண்டு 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை மொத்தம் 51 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் போட்டியும், மே 27-ந் தேதி இறுதிப்போட்டியும் மும்பையில் நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 7-ந் தேதி (இன்று) நடைபெறவுள்ள முதல் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பின்னர் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மோதுகிறது. கடந்த 15 நாட்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதைப் பார்க்கவே அங்கு பெருமளவில் ரசிகர்கள் குவிந்தனர். 

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள முதல் போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே ரசிகர்கள் புது பயிற்சி முறையை மேற்கொண்டனர். பள்ளிப் பருவத்தில் வகுப்பறையில் விளையாடும் புக் கிரிக்கெட் விளையாட்டை சிஎஸ்கே வீரர்களும் முயற்சி செய்தனர். போட்டியின் போது ஏற்படும் மனஉளைச்சலை தடுக்கும் விதமாக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.