சென்னையில் நடைபெறவுள்ள முதல் ஐபிஎல் போட்டி ரத்து?

சென்னையில் நடைபெறவுள்ள நடப்பு சீசனுக்கான முதல் போட்டி ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் நடைபெறவுள்ள முதல் ஐபிஎல் போட்டி ரத்து?
Updated on
1 min read

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி பல்வேறு தரப்பில் இருந்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள நடப்பு சீசனுக்கான முதல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று சில அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் மைதானத்துக்குள் சென்று தங்கள் கோரிக்கைகளை கோஷங்களாக முன்வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியை ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் போட்டி கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மைதானத்துக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வரும் 10-ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. 

முன்னதாக, 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 7-ஆம் தேதி) கோலாகலமாகத் தொடங்கியது. மும்பை இந்தியன்ஸுடன் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி த்ரில் வெற்றி பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com