இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார் அக்ஷர் படேல்!
சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேலும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்...


எதிர்வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மோதவுள்ள நிலையில், அதற்குத் தயாராகும் வகையில் கோலி உள்ளிட்டோர் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலி, லண்டனைச் சார்ந்த சர்ரே அணிக்காக களம் காண வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சேதேஷ்வர் புஜாரா- யோர்க்ஷைர் அணிக்காகவும், ரவிச்சந்திரன் அஸ்வின்-வார்விக்ஷைர் அணிக்காகவும், இஷாந்த் சர்மா சஸ்ஸக்ஸ் அணிக்காவும் விளையாடவுள்ளனர்.
இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேலும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார். அவர் டுர்ஹாம் அணிக்குத் தேர்வாகியுள்ளார். இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...