டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி ஞாயிற்றுக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வந்தனர்.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் 3-ஆம் இடத்துக்கான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் இந்தியாவின் மணிகா பத்ரா, சத்யன் குணசேகரன் ஜோடி இந்தியாவின் அசந்தா ஷரத் கமல், மௌமா தாஸ் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
மணிகா, சத்யன் ஜோடி 11-6, 11-2, 11-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் நடப்பு காமன்வெல்த் போட்டியில் மட்டும் மணிகா பத்ரா 4-ஆவது பதக்கம் வென்றார். மேலும் டெபிள் டென்னிஸ் பிரிவிலும் இந்தியாவுக்கு 7-ஆவது பதக்கம் கிடைத்தது.