மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காமன்வெல்த் 2018: பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி

2018 காமன்வெல்த் போட்டிகளில் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2018, 8:58 am

2018 காமன்வெல்த் போட்டிகளில் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வந்தனர்.

இந்நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவு பாட்மிண்டன் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி மற்றும் சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி இங்கிலாந்தின் மார்கஸ் ஈலிஸ் மற்றும் கிறிஸ் லாங்க்ரிட்ஜ் ஜோடியுடன் மோதியது.

சுமார் 40 நிமிடங்களாக நீடித்த இப்போட்டியில் 13-21 மற்றும் 16-21 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்து ஜோடி வெற்றிபெற்று தங்க பதக்கம் வென்றது. ஆகவே இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய ஜோடிக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.