சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: 3-ஆவது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் 3-ஆவது சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றுள்ளார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2018, 1:50 pm

DIN

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் 3-ஆவது சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றுள்ளார். 

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பின் மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்தோனேஷிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.    

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்தோனேஷிய வீராங்கனை ஃபிட்ரியானியை எதிர்கொண்டார். 

தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சிந்து முதல் செட்டை 21-14 என கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது செட்டையும் பி.வி.சிந்து 21-9 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். இதன்மூலம் 21-14, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சிந்து 3-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

இதே தினத்தில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஸ்பெயின் வீரர் அபியனை எதிர்கொண்டார். அதில், முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட ஸ்பெயின் வீரர் எழுச்சி பெற்று 21-12 என்ற கணக்கில் 2-ஆவது செட்டை கைப்பற்றினார். 

தொடர்ந்து நடைபெற்ற வெற்றியை தீர்மானிக்கும் 3-ஆவது செட்டை ஸ்ரீகாந்த் 21-14 என கைப்பற்றி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு இந்திய வீரரான பிரணாய் பிரேசில் வீரர் கோயெல்ஹோவை எதிர்கொண்டார். அதில், முதல் செட்டை 21-8 என்ற கணக்கில் பிரணாய் எளிதில் கைப்பற்றினார். ஆனால், அடுத்த 2 செட்களில் சொதப்பிய அவர் 16-21, 15-21 என இழந்து 1-2 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். 

ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்திய வீரர் சமீர் வெர்மா பிரான்ஸ் வீரர் லூகாஸ் கோர்வேவை எதிர்கொண்டார். அதில், சமீர் 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜப்பான் ஜோடியிடம் 14-21, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.