ஸ்பெயின் நாட்டின் கிளப் அணியான பார்சிலோனாவுக்கு லயோனல் மெஸ்ஸி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் கிளப் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமாக அணி பார்சிலோனா. கடந்த 2015-இல் இருந்து கேப்டனாக இருந்தவர் இனிஸ்டா. இவர், தற்போது ஜப்பான் கிளப் அணியில் இணைந்துள்ளார்.
இதையடுத்து, அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2015-இல் இருந்து மெஸ்ஸி 2-ஆவது கேப்டனாக செயல்பட்டு வந்தார். தற்போது இனிஸ்டா இல்லாததால் வரும் லாலிகா தொடரில் இருந்து பார்சிலோனா அணியின் முழு நேர கேப்டனாக மெஸ்ஸி பொறுப்பேற்றுக்கொள்கிறார்.
செர்ஜியோ பஸ்குவெட்ஸ், கெரார்ட் பிக் மற்றும் செர்ஜி ரோபெர்டோ ஆகியோர் முறையே 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது கேப்டனாக பொறுப்பேற்கவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









