வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பார்சிலோனா அணியின் புதிய கேப்டனாக மெஸ்ஸி நியமனம்

ஸ்பெயின் நாட்டின் கிளப் அணியான பார்சிலோனாவுக்கு லயோனல் மெஸ்ஸி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

News image
Updated On :11 ஆகஸ்ட் 2018, 1:11 pm

DIN

ஸ்பெயின் நாட்டின் கிளப் அணியான பார்சிலோனாவுக்கு லயோனல் மெஸ்ஸி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஸ்பெயின் நாட்டின் கிளப் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமாக அணி பார்சிலோனா. கடந்த 2015-இல் இருந்து கேப்டனாக இருந்தவர் இனிஸ்டா. இவர், தற்போது ஜப்பான் கிளப் அணியில் இணைந்துள்ளார். 

இதையடுத்து, அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2015-இல் இருந்து மெஸ்ஸி 2-ஆவது கேப்டனாக செயல்பட்டு வந்தார். தற்போது இனிஸ்டா இல்லாததால் வரும் லாலிகா தொடரில் இருந்து பார்சிலோனா அணியின் முழு நேர கேப்டனாக மெஸ்ஸி பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

செர்ஜியோ பஸ்குவெட்ஸ், கெரார்ட் பிக் மற்றும் செர்ஜி ரோபெர்டோ ஆகியோர் முறையே 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது கேப்டனாக பொறுப்பேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.