ஆசியப் போட்டி மல்யுத்தம் மகளிர் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
மல்யுத்தத்தில் ஆடவர் பிரிவில் பஜ்ரங் புனியா இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்தார். இந்நிலையில் மகளிர் பிரிவிலும் வினேக் போகட், சாக்ஷி மாலிக், பூஜா தண்டா போன்றவர்கள் பங்கேற்ற ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
மகளிர் 50 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் 8-2 என்ற புள்ளிக்கணக்கில் சீனாவின் சன் யனானை வீழ்த்தினார். காலிறுதியில் தென்கொரியாவின் கீம் யுங்ஜூவை 11-0 என்ற புள்ளிக் கணக்கில் வெறும் 100 வினாடிகளில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் வினேஷ் உஸ்பெகிஸ்தானின் யக்ஷிமுரடோவோவை 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார். இறுதிச் சுற்றில் அவர் ஜப்பானின் யூரி ஐரியை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கம் வென்றார்.
ஆசியப் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் வினேஷ் போகட் பெற்றார்.
57 கிலோ பிரிவில் பூஜா தண்டா 64 வினாடிகளில் தாய்லாந்தின் ஓரஸா சுக்டோங்யோரை வீழ்த்தினார். காலிறுதியில் அவர் உஸ்பெகிஸ்தானின் நபீரா எùஸன்பெவாவை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானின் சகாகமி 6-1 என்ற புள்ளிக்கணக்கில் பூஜாவை வென்றார். 62 கிலோ பிரிவில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் 10-0 என்ற புள்ளிக்கணக்கில் தாய்லாந்தின் சாலினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதில் கிர்கிஸ்தானின் அஸுலு பெகோவாவிடம் 7-8 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிரியா், மாணவா் எண்ணிக்கையை அதிகரித்துக் காண்பித்து அரசுக்கு நிதி இழப்பு: பள்ளித் தாளாளா், தலைமை ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி உறுப்பினராக நிதி மோசடி தணிக்கையாளரை சோ்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் ஏழு கன்னியா்களுடன் வீதியுலா!

பனை மரங்களுக்கு தீ : நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



