இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்த தமிழக வீரர்: அபினவ் முகுந்த் சாதனை!

ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ள தமிழக வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் அபினவ் முகுந்த்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:58 pm

எழில்

ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ள தமிழக வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் அபினவ் முகுந்த். 

ஹிமாசல பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 2-வது இன்னிங்ஸில் சதமடித்துள்ளார் முகுந்த். இதன்மூலம் ரஞ்சி போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்துள்ள தமிழக வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு எஸ். ஷரத் 6597 ரன்கள் எடுத்ததே தமிழக அணி சார்பாக ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்ததாக இருந்தது. இந்நிலையில் இன்று 72 ரன்கள் எடுத்தபோது அச்சாதனையை முறியடித்தார் முகுந்த். சதமடித்தபோது தமிழக அணி சார்பாக முகுந்த் 6626 ரன்கள் எடுத்திருந்தார். 

ரஞ்சிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ள தமிழக வீரர்கள்

அபினவ் முகுந்த் - 6637 ரன்கள்
எஸ். ஷரத் - 6597 ரன்கள்
எஸ். பத்ரிநாத் - 6383 ரன்கள்
தினேஷ் கார்த்திக் - 6120 ரன்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.