நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் எடுக்கவேண்டும்: பந்துவீச்சாளர்களின் நிலைமை குறித்து விராட் கோலி

பேட்டிங் குழுவாக இன்னும் அதிக ரன்களை நாங்கள் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தற்போது நாங்கள் எடுக்கும் ஸ்கோர்களுக்கு...

News image
Updated On :25 டிசம்பர் 2018, 3:59 pm IST

டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் ரன்களைச் சேர்க்கவேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.  அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது.  இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளைப் பாதுகாக்கவேண்டும். பந்துவீச்சாளர்கள் எப்படி தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்று பார்த்து வருகிறோம். பேட்டிங் குழுவாக இன்னும் அதிக ரன்களை நாங்கள் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தற்போது நாங்கள் எடுக்கும் ஸ்கோர்களுக்கு பந்துவீச்சாளர்கள் வெற்றியைத் தேடித்தர சிரமப்படுவார்கள். 

முதலில் பேட்டிங் செய்தால் பெரிய ஸ்கோரை எடுத்து பந்துவீச்சாளர்கள் வெற்றி வாய்ப்பை உருவாக்க வழிசெய்யவேண்டும். இரண்டாவது பேட்டிங் செய்யும்போது, எதிரணியை விடவும் அதிக ரன்கள் எடுத்து முன்னிலை பெறவேண்டும். அல்லது அவர்களுடைய ஸ்கோருக்கு அருகிலாவது செல்லவேண்டும். இதன்மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்தமுடியும். பேட்டிங் குழு அதிக முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று நிச்சயம் சொல்வேன். அதேசமயம் எந்தவொரு குறிப்பிட்ட வீரரையும் குறிப்பிட்டுச் சொல்லி, அவர் என்ன செய்யவேண்டும் எனச் சொல்லமாட்டேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.