திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

விஹாரி தொடக்க வீரராகக் களமிறங்குவது நீண்ட நாளைக்கான திட்டமல்ல: தேர்வுக்குழுத் தலைவர்

தொடக்க வீரர்கள் சமீபகாலமாகச் சரியாக விளையாடவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது...

News image
Updated On :25 டிசம்பர் 2018, 2:26 pm IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. 

இதற்கான இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தமுறை விளையாடவுள்ள 11 வீரர்களின் பெயர்களை நேரடியாக அறிவித்துள்ளது இந்திய அணி. இந்திய அணியிலிருந்து விஜய், ராகுல், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். மயங்க் அகர்வால், ஜடேஜா, ரோஹித் சர்மா ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஹேண்ட்ஸ்காம்ப்-புக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்திய அணியின் தேர்வு குறித்து தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:

தொடக்க வீரர்கள் சமீபகாலமாகச் சரியாக விளையாடவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. சரியான கூட்டணியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பார்தீவ் படேலால் என்ன முடியாது, விஹாரியால் என்ன முடியும் எனப் பார்க்கிறோம். இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் முடிவெடுத்தோம். ஆனால் இது நீண்ட நாளைக்கான திட்டமல்ல. அணியின் தேவைக்காக இதற்கு முன்பு புஜாரா கூட தொடக்க வீரராகக் களமிறங்கியுள்ளார் என்று விளக்கமளித்துள்ளார். இதையடுத்து மயங்க் அகர்வாலும் விஹாரியும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3-வது டெஸ்டுக்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), விஹாரி, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜடேஜா, பூம்ரா, ஷமி, இஷாந்த் சர்மா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.