4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார் தெ.ஆ. வீரர் மோர்னே மோர்கெல்!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் கூறியுள்ளார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2018, 12:21 pm

எழில்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது சவாலாக உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர முடிவு செய்துள்ளேன். அடுத்து விளையாடவுள்ள ஆஸ்திரேலியத் தொடரில் வெற்றி பெற முனைப்புடன் போராடுவேன் என்று கூறியுள்ளார். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்தாலும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று மோர்னே மோர்கெல் கூறியுள்ளார். 

மோர்னே மோர்கெல் இதுவரை 83 டெஸ்டுகளில் விளையாடி 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

Story image

ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவில் நான்கு டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 1 அன்று ஆரம்பமாகிறது. டெஸ்ட் தொடர் நான்காவது டெஸ்டுடன் ஏப்ரல் 3 அன்று நிறைவுபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.