திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆஸி. ஓபன்: 5 முறை சாம்பியன் வெளியேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் வெளியேற்றப்பட்டார்.

News image
Updated On :22 ஜனவரி 2018, 3:23 pm

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முன்னணி வீரர்களான ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்கள்.

இந்நிலையில் மற்றொரு முன்னணி வீரரும் 5 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4-ஆவது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவின் சங் ஹியோனை திங்கள்கிழமை எதிர்கொண்டார்.

இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சங் ஹியோன், 6-7 (4-7), 5-7, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் 12 கிராண்ட்ஸலாம் பட்டங்களை வென்றுள்ள நோவக் ஜோகோவிச், 6-ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.