ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் சைமோனா ஹேலப் - கரோலின் வோஸ்னியாக்கி ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள்.
மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் - போட்டித் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் ஆகியோர் மோதினார்கள். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-3 4-6 9-7 என்ற செட் கணக்கில் சைமோனா ஹேலப் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

சைமோனா ஹேலப்
மற்றொரு அரையிறுதிச் சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி - எலிஸ் மெர்டன்ஸ் ஆகியோர் மோதினார்கள். இதில் 6-3 7-6(2) என்ற நேர் செட்களில் வெற்றியடைந்தார் கரோலின்.
இதையடுத்து, இறுதிச்சுற்றில் சைமோனா ஹேலப் - கரோலின் வோஸ்னியாக்கி ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள். இருவருமே இதுவரை எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றதில்லை. அந்த வகையில் இறுதிச்சுற்று அதிகக் கவனத்துக்கு ஆளாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீஞ்சூர் சம்பவம்! வீட்டிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பில் - அண்ணாமலை

பெண் தற்கொலை! ரூ.8,000 கூப்பன் - மண்ணுளிப் பாம்பா? இரிடியமா? விஜய் கண்டனம்!

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
லெனின் பாண்டியன் டிரைலர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


