மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிச்சுற்றில் மோதவுள்ள நெ.1 & நெ.2 வீராங்கனைகள்!

இருவருமே இதுவரை எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றதில்லை. அந்த வகையில்...

News image

கரோலின் வோஸ்னியாக்கி

Updated On :25 ஜனவரி 2018, 9:41 am

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் சைமோனா ஹேலப் - கரோலின் வோஸ்னியாக்கி ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள்.

மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் - போட்டித் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் ஆகியோர் மோதினார்கள். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-3 4-6 9-7 என்ற செட் கணக்கில் சைமோனா ஹேலப் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

சைமோனா ஹேலப்

சைமோனா ஹேலப்

மற்றொரு அரையிறுதிச் சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி - எலிஸ் மெர்டன்ஸ் ஆகியோர் மோதினார்கள். இதில் 6-3 7-6(2) என்ற நேர் செட்களில் வெற்றியடைந்தார் கரோலின்.

இதையடுத்து, இறுதிச்சுற்றில் சைமோனா ஹேலப் - கரோலின் வோஸ்னியாக்கி ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள். இருவருமே இதுவரை எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றதில்லை. அந்த வகையில் இறுதிச்சுற்று அதிகக் கவனத்துக்கு ஆளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.