ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா, வாஷிங்டன் சுந்தர் நீக்கம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :1 ஜூலை 2018, 12:30 pm

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டிகளின் போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.

பந்தை தடுக்க முயன்ற போது அவரது இடதுகை விரலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு விரல் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் டி20 அணியில் இருந்து பும்ரா நீக்கப்பட்டார். மேலும் ஒருநாள் தொடரில் அவர் இடம்பெறுவதும் கேள்விக்குரியாகியுள்ளது. 

அவருக்கு பதிலாக இந்திய ஏ அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர், இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுபோல பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்று வீரர்களாக ஒருநாள் அணியில் அக்ஷர் படேல் மற்றும் டி20 அணியில் க்ருணால் பாண்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கூட தற்போது இந்திய ஏ அணியில் இடம்பிடித்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

க்ருணால் பாண்டியா, தற்போது இந்திய அணியில் நட்சத்திர ஆல்-ரவுண்டராக திகழும் ஹார்திக் பாண்டியாவின் மூத்த சகோதரர் ஆவார். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரின் போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், மாற்றம் செய்யப்பட்ட இந்திய டி20 அணியின் விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், க்ருணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், ஹார்திக் பாண்டியா, சித்தார்த் கௌல், உமேஷ் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.