

மும்பையில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மனைவி ஆண்ட்ரியா ஹீவைட் மற்றும் பிரபல பாலிவுட் பாடகர் அங்கித் திவாரியின் தந்தை ராஜ் குமார் திவாரிக்கும் இடையே பாலியல் சீண்டல் தொடர்பாக சண்டை ஏற்பட்டது. இதில் வினோத் காம்ப்ளியின் மனைவி அந்த பாலிவுட் பாடகரின் தந்தையை அடித்துள்ளார்.
இதுகுறித்து வினோத் காம்ப்ளி கூறுகையில்,
நானும் எனது மனைவியும் அந்த வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்த போது பாலிவுட் பாடகர் அங்கித் திவாரியின் தந்தை ராஜ் குமார் திவாரி எனது மனைவி ஆண்ட்ரியா ஹீவைட் இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது எனது மனைவி அவரை அடித்தார். இதில் தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு உடனடியாக தனது நிலைப்பாட்டை எனது மனைவி எடுத்தார். இதை நான் வரவேற்கிறேன்.
மேலும் ஆண்ட்ரியா கூறியதாவது:
என் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர், தேவையற்ற விதமாகவும் என்னிடம் பேசினார். எனவே இவ்விவகாரத்தில் நான் எடுத்த முடிவு மிகவும் சரியானது தான். அப்போது அவரது மகன்கள் உடனடியாக என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளேன் என்றார்.
ஆனால் ராஜ் குமார் திவாரியை அச்சமயத்தில் என்னையும், எனது மனைவியையும் மிரட்டினார். எனவே இதுகுறித்து பங்கூர் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்றார். மேலும் பாலிவுட் பாடகர் அங்கித் திவாரியின் தந்தை ராஜ் குமார் திவாரியும் அதே காவல் நிலையத்தில் வினோத் காம்ப்ளி மனைவி ஆண்ட்ரியா மீது புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. ஆனால், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.