சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

7 வருடங்கள் கழித்து விம்பிள்டன் காலிறுதிக்குத் தகுதி பெற்றார் நடால்!

கடைசியாக 2011-ம் ஆண்டு விம்பிள்டன் காலிறுதிக்குத் தகுதி பெற்றார் ரஃபேல் நடால்... 

News image
Updated On :10 ஜூலை 2018, 10:16 am

கடைசியாக 2011-ம் ஆண்டு விம்பிள்டன் காலிறுதிக்குத் தகுதி பெற்றார் ரஃபேல் நடால். அந்த வருடம் இறுதிச்சுற்று வரை முன்னேறிய நடால், ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்து 2-ம் இடம் பெற்றார்.

7 வருடங்கள் கழித்து மீண்டும் விம்பிள்டன் காலிறுதி ஆட்டத்தில் அவர் விளையாடவுள்ளார்.

செக் குடியரசைச் சேர்ந்த ஜிரி வெஸ்லியை  6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு நுழைந்துள்ளார் நடால். 

2012-ல் இரண்டாவது சுற்றிலும் அடுத்த ஆண்டு முதல் சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறினார் நடால். 2014-ல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுவரை முன்னேறினார். 2015-ல் மீண்டும் இரண்டாவது சுற்றில் தோற்றுப்போனார். அடுத்த ஆண்டு காயம் காரணமாகப் போட்டியிலேயே பங்கேற்கவில்லை. கடந்த வருடமும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். இந்நிலையில் 2011-க்குப் பிறகு இந்த ஆண்டுதான் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 35-வது முறையாகக் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளார் நடால். கிராண்ட்ஸ்லாம் காலிறுதிகளில் நடாலின் வெற்றி விகிதம் 79%. இதனால் அவர் அரையிறுதிக்குத் தகுதி பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  

நடால், இருமுறை விம்பிள்டன் போட்டியை வென்றுள்ளார். இந்த ஆண்டு இதுவரை அவர் ஒரு செட்டைக் கூட இழக்காமல் வெற்றி பவனி வந்துகொண்டிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.