யோ யோ தேர்வில் தேர்ச்சி: இங்கிலாந்து செல்கிறார் ரோஹித்

யோ யோ தேர்வில் தேர்ச்சியடைந்த ரோஹித் ஷர்மா, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
யோ யோ தேர்வில் தேர்ச்சி: இங்கிலாந்து செல்கிறார் ரோஹித்
Updated on
1 min read

இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கான ஃபிட்னஸ் தொடர்பான யோ யோ தேர்வு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்றது.

ரஷியாவில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்த தேர்வில் பங்கேற்க அவகாசம் அளிக்குமாறு ரோஹித் ஷர்மா, பிசிசிஐ-க்கு கோரிக்கை வைத்தார். இதனால் இதர வீரர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில் தோல்வியடைந்த அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக யோ யோ தேர்வில் தேர்ச்சியடைந்த சுரேஷ் ரெய்னா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, ஐபிஎல் தொடரின் போது நடத்தப்பட்ட யோ யோ தேர்வில் ரோஹித் ஷர்மா தோல்வியடைந்தார். இதனால் அவரது ஃபிட்னஸ் குறித்து கேள்வி எழுந்தது. இதனிடையே இந்திய அணியின் துணைக் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதன்கிழமை நடத்தப்பட்ட யோ யோ தேர்வில் ரோஹித் ஷர்மா தேர்ச்சியடைந்தார். இதை தனது சமூக வலைதளப்பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். எனவே இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் ரோஹித் இடம் உறுதியானது.

 

Yo-Yo ✔️ See you shortly Ireland

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on Jun 20, 2018 at 2:39am PDT

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com