பாண்டியாவுடனான ஒப்பீடு குறித்து ‘ஆட்ட நாயகன்’ விஜய் சங்கர் பேட்டி!

எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் ஒப்பீடுகளை விரும்பமாட்டார். நம்மிடம் உள்ள திறமையை...
பாண்டியாவுடனான ஒப்பீடு குறித்து ‘ஆட்ட நாயகன்’ விஜய் சங்கர் பேட்டி!

நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் வீழ்ந்திருந்த இந்தியா, தற்போது 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது.

கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வென்றது. 2 விக்கெட்டுகள் எடுத்த தமிழகத்தின் விஜய் சங்கர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இதன்பிறகு விஜய் சங்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மிகவும் கடுமையாக உழைக்கிறேன். அதற்கான பலன் கிடைத்துள்ளது. அடுத்த ஆட்டத்திலும் திறமையை வெளிப்படுத்த ஆவலாக உள்ளேன். 

என் பந்துவீச்சில் சில கேட்சுகள் நழுவவிடப்பட்டன. இதனால் நான் கவலைப்படவில்லை. ஆட்டத்தின் ஒரு பகுதிதான் இதுவும். விளக்கொளியில் வெள்ளைப் பந்தைக் கேட்ச் பிடிக்க முயல்வது எளிதல்ல. அதேபோல வைட், நோ பந்துகளை வீசியதும் ஆட்டத்தின் ஒரு பகுதிதான். வைட் யார்க்கரை வீச முயற்சி செய்கிறபோது இதுபோல நடந்துவிடும். ஒரு பந்துவீச்சாளராக இதுபோன்ற கூடுதல் முயற்சிகள் அவசியம்.

பாண்டியாவுடன் என்னை ஒப்பிடுவது குறித்து கேட்கிறீர்கள். எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் ஒப்பீடுகளை விரும்பமாட்டார். நம்மிடம் உள்ள திறமையைப் பயன்படுத்துவதுதான் முக்கியம். ஒப்பீடுகளால் நாம் அழுத்தத்துக்கு ஆளாகக் கூடாது. என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com