உரக்க அழைத்தும் கவனிக்காத வீரர் மீது பந்தை எறிந்த பந்துவீச்சாளர்: பிரபல வீரர் ஆச்சர்யம்! (விடியோ)

லாகூர் அணியை வழிநடத்தும் மெக்கல்லம் பிறகு இருவரையும் சமாதானப்படுத்தினார்...
உரக்க அழைத்தும் கவனிக்காத வீரர் மீது பந்தை எறிந்த பந்துவீச்சாளர்: பிரபல வீரர் ஆச்சர்யம்! (விடியோ)

என் கிரிக்கெட் வாழ்வில் மிகவும் நகைச்சுவையான சம்பவத்தை இப்போது பார்த்துள்ளேன். பவுண்டரி அருகே நின்றிருந்த வீரர் மீது பந்துவீச்சாளர் பந்தை எறிந்துள்ளார். நம்பமுடியாத நகைச்சுவை.

இப்படி ட்வீட் செய்துள்ளார் பிரபல வீரர் கெவின் பீட்டர்சன். அட, அப்படி என்னதான் நடந்தது?

நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில்தான் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. குயூட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் லாகூர் குவாலாண்டர்ஸ் அணிகளுக்கிடையே போட்டி முடியும் தருவாயில் பந்துவீச்சாளர் சோஹைல் கான் தனக்கேற்றபடி ஃபீல்டர்களை மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது பவுண்டரி அருகே இருந்த யாசிர் ஷாவை அவர் அழைத்தார். ஆனால் யாசிர் இதைக் கவனிக்கவில்லை. 

உரக்க அழைத்தும் கவனிக்காததால் கடுப்பான சோஹைல் கான் பந்தைத் தூக்கி யாசிர் ஷா மீது எறிந்தார். நல்லவேளை யாசிர் தலையில் பந்து படவில்லை. இதன்பிறகே சோஹைல் கானின் அழைப்பைக் கவனித்தார் யாசிர். மரியாதையின்றி தன் மீது பந்தை எறிந்ததால் தன் பங்குக்குக் கடுப்பான யாசிர் ஷாவும் அதே பந்தை எடுத்து சோஹைல் கான் மீது திருப்பி வீசினார். பிறகு இருவரும் ஒருவரையொருவர் திட்டியபடி இருந்தார்கள். 

லாகூர் அணியை வழிநடத்தும் மெக்கல்லம் பிறகு இருவரையும் சமாதானப்படுத்தினார். இதன்பிறகு இச்சம்பவம் குறித்து குயூட்டா அணியைச் சேர்ந்த பீட்டர்சன் ட்விட்டரில் வெளியிட, ரசிகர்களுக்கும் இந்தக் காட்சியைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com