மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆஸி.க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :19 மார்ச் 2018, 1:34 pm

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. எனவே அடுத்து நடைபெறும் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாகப் பயிற்சி செய்து வருகின்றன. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு அடுத்த 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இதுதொடர்பான மேல்முறையீடு விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆலிவியர் என்னும் இளம் ஆல்-ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு அனுபவ ஆல்-ரவுண்டரான கிறிஸ் மோரிஸும் இடம்பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், கடந்த 2017 ஜுலை இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டியில் மோரிஸ் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு தடை தொடர்ந்தால் அவருக்கு பதிலாக மார்கல் இடம்பிடிக்கக்கூடும். இவர் இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 

17 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:

டூ பிளெஸிஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, டெம்போ பவூமா, குயின்டன் டி காக், டி பிரையன், ஏபி டி வில்லியர்ஸ், டீன் எல்கர், ஹென்ரிச் க்ளாஸன், கேசவ் மகாராஜ், ஏய்டன் மர்கராம், மோர்னே மார்கல், வியான் முல்டர், லுங்கி நிகிடி, வெரோன் பிளாண்டர், காகிஸோ ரபாடா, ஆலிவியர், கிறிஸ் மோரிஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.