தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றில் நடால்

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

News image

மான்ஃபில்ஸுக்கு பந்தை திருப்பும் நடால்.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக, ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்றில் அவர் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை 6-3, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார்.
ஜோகோவிச் தோல்வி: போட்டித் தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3-6, 6-2, 3-6 என்ற செட்களில் பிரிட்டனின் கைல் எட்மன்டிடம் தோல்வி கண்டார். 
போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தின் டேவிட் காஃபின்7-5, 6-3 என்ற செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹசியை வீழ்த்தினார்.
போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் 5-7, 7-(7/3), 6-2 என்ற செட்களில் கஜகஸ்தானின் மிகைல் குகுஷ்கினை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர் ஜெர்மனியின் பிலிப் கோல்ஷ்ரைபரை சந்திக்கிறார்.
முன்னதாக, போட்டித் தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ராபர்டோ பெளதிஸ்டா அகுட் 3-6, 6-4, 5-7 என்ற செட்களில் பிலிப் கோல்ஷ்ரைபரிடம் வீழ்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.