விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புணே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தோனி கொடுத்த 'இன்ப அதிர்ச்சி' 

புணேவில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி லீக் ஆட்டத்திற்குப் பிறகு, ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு விஷேச பரிசளித்து தோனி 'இன்ப அதிர்ச்சி' அளித்துள்ளார்.  

News image
Updated On :21 மே 2018, 3:14 pm

புணே: புணேவில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி லீக் ஆட்டத்திற்குப் பிறகு, ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு விஷேச பரிசளித்து தோனி 'இன்ப அதிர்ச்சி' அளித்துள்ளார்.  

ஐபிஎல்லில் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் போட்டிகள் அனைத்தும், காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக நடந்த கடுமையான போராட்டம் காரணமாக புணே நகருக்கு மாற்றப்பட்டது. அதனால் அடுத்து புணேவில் இந்தமுறை விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இறுதியாக ஞாயிறன்று பஞ்சாப் கிங்ஸ்லெவன் அணிக்கு எதிரான கடைசி லீக் சுற்றுப்போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

புனே மைதானத்தில் பெற்ற தொடர் வெற்றிகளை அடுத்து ஆடுகளத்தை நன்கு பராமரித்த ஊழியர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்று தோனி விரும்பினார்.

அதையடுத்து ஞாயிறன்று போட்டி தொடங்கு முன் ஆடுகளம் பராமரிப்பில் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் சிஎஸ்கே அணி சார்பில் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தைப் பரிசளித்தார். மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்து அந்தப் படத்தையும் பரிசாக அளித்தார்.

இது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் புனே ஆடுகளத்தைச் சிறப்பாக பராமரித்து வரும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான சிறிய வெகுமதிதான் இது. இந்த பணம் வீரர்கள் அனைவரின் தரப்பில் இருந்தும், அணி நிர்வாகம் சார்பிலும் இருந்து தரப்பட்டது என்று கூறப்பட்டது.

முன்னதாக கடந்த வாரத்தில் புனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்கள் தோனி தனது மகள் ஜிவாவை தூக்கி வைத்து கொஞ்சுவதுபோல் இருக்கும் வரையப்பட்ட ஓவியத்தை அவருக்கு பரிசாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.