லார்ட்ஸில் மே 31 அன்று மேற்கிந்தியத் தீவுகள் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் நடைபெறவுள்ளது. கடந்த வருடம், மேற்கிந்தியத் தீவுகளில் புயலால் பாதிப்புக்கு உள்ளான கிரிக்கெட் மைதானங்களைச் சீரமைக்க நிதி திரட்டுவதற்காக இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சர்வதேச அந்தஸ்து அளித்துள்ளது. உலக லெவன் அணிக்கு இங்கிலாந்தின் இயன் மார்கன் கேப்டனாக உள்ளார்.
இந்த டி20 ஆட்டத்தில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஐபிஎல்-லில் சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரே ரஸ்ஸல் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் கடைசியாக 2016 ஆகஸ்டில் மே.இ. அணியில் இடம்பிடித்தார். கெய்ல், சாமுவேல்ஸ், லீவிஸ் போன்ற வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
இந்நிலையில் உலக லெவன் அணியில் இடம்பிடித்த இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, உடல் நலக்குறைவால் இந்த ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து இந்தியாவின் முகமது ஷமி, இங்கிலாந்தின் அடில் ரஷித் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். உலக லெவன் அணியில் 12 பேர் உள்ளார்கள்.
உலக லெவன்:
இயன் மார்கன் (கேப்டன்), ஷாகித் அஃப்ரிடி, தமிம் இக்பால், தினேஷ் கார்த்திக், ரஷித் கான், சந்தீப் லமிச்சனே, மிட்செல் மெக்லெனகன், சோயிப் மாலிக், திசாரா பெரேரா, லூக் ரோஞ்சி, அடில் ரஷித், முகமது ஷமி.
மேற்கிந்தியத் தீவுகள் அணி:
கார்லோஸ் பிரத்வெயிட் (கேப்டன்), ரயத் அம்ரிட், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ் ஆஸ்லே நர்ஸ், கீமோ பால், ரோவ்மேன் பவல், தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சாமுவேல் பத்ரீ, மார்லன் சாமுவேல்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.