தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

இலங்கை முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹெராத் ஓய்வு அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரங்கன ஹெராத், திங்கள்கிழமை ஓய்வு முடிவை அறிவித்தார்.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 3:03 pm

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரங்கன ஹெராத், திங்கள்கிழமை ஓய்வு முடிவை அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரும், முதன்மை இடதுகை சுழற்பந்துவீச்சாளருமாக திகழ்பவர் ரங்க ஹெராத். 1999-ஆம் ஆண்டு அறிமுகமான ஹெராத், தற்போது ஐசிசி தரவரிசையில் 7-ஆம் இடத்தில் உள்ளார். 

40 வயதான ஹெராத், தற்போது வரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 430 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 34 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் மற்றும் 9 முறை 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பந்துவீச்சு சராசரி 27.95 ஆகும்.

காலே மைதானத்தில் அறிமுகமான ஹெராத், அங்கு இன்னும் 1 விக்கெட் வீழ்த்தினால் அந்த மைதானத்தில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதனையை சமன் செய்வார். 

இந்நிலையில், காலே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ரங்கன ஹெராத் அறிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் 19 வருடங்களாக விளையாடி அனைத்து வகை போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 522 விக்கெட்டுகளை ஹெராத் வீழ்த்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.