திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடா்: பிசிசிஐ திட்டம்?

பாகிஸ்தானுடன் வரும் 2019-இல் கிரிக்கெட் தொடர் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 1:26 pm

பாகிஸ்தானுடன் வரும் 2019-இல் கிரிக்கெட் தொடர் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே நிலவும் சூழல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த 2014, 2015-இல் பாகிஸ்தானில் நடைபெற இருந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கவில்லை.

அச்சமயம் பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால் பாதுகாப்பு காரணமாக எந்த அணியும் பாகிஸ்தான் செல்லவில்லை.  

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) 70 மில்லியன் அமெரிக்க டாலா்கள் (ரூ.500 கோடிக்கு இழப்பீடு) வழங்க வேண்டும் என பிசிசிஐயிடம் கோரியுள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் இடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது இருநாடுகளுக்கு இடையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக வினோத் ராய் தலைமையிலான செயற்குழுவுடன் ராகுல் ஜோரி ஆலோசிக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.