தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சர்ஃப்ராஸ் அகமது சிறந்த கேப்டன்: சௌரவ் கங்குலி புகழாரம்

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிகளைப் பதிவு செய்தது.

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 2:39 pm

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிகளைப் பதிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன்பதவியில் இருந்து சர்ஃப்ராஸ் அகமது நீக்கப்பட வேண்டும் என்பது போன்ற கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது குறித்து கூறுகையில்,

சர்ஃப்ராஸ் அகமது சிறந்த கேப்டன் ஆவார். அவரைப் போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்கள் தினமும் பிறப்பதில்லை. சர்ஃப்ராஸ் மிகவும் தைரியமானவர். கடந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் போது அவர் பாகிஸ்தான் அணியை திறம்பட வழிநடத்தினார்.

தற்சமயம் சர்ஃப்ராஸ் அமகதுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் துணை நிற்க வேண்டும். அவருக்கு தேவையான ஊக்கத்தை அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த தொடரிலும் ஒரு கேப்டனாக அவர் சரியாகவே செயல்பட்டார் என்று தெரிவித்தார்.

ஆசிய கோப்பை தொடரில் செப்டம்பர் 24-ஆம் தேதி வங்கதேசத்துடனான 3-ஆவது சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்றால், இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.