கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி சமீபத்தில் பங்கேற்றுள்ளது. பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது. இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் ஒரு பேட்டியில் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியதாவது:
பகலிரவு டெஸ்ட் குறித்து நான் மகிழ்ச்சியாக உள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டை இது முன்னகர்த்திச் செல்லும். ஒவ்வொரு டெஸ்டிலும் இல்லாமல், ஒரு தொடரில் ஒரு டெஸ்டாவது பகலிரவு டெஸ்டாக இருக்கவேண்டும். கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் குறித்த என்னுடைய அனுபவங்களை பிசிசிஐ நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொள்வேன். இதர மைதானங்களிலும் பகலிரவு டெஸ்ட் நடத்தப்படும். வெறும் ஐந்தாயிரம் ரசிகர்கள் முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட யாரும் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


