டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஸ்ரேயஸ் ஐயர் 4-ம் நிலை வீரராக விளையாட வேண்டும்: கும்ப்ளே விருப்பம்

ஒருநாள் தொடர் குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான அனில் கும்ப்ளே, ஒரு பேட்டியில் கூறியதாவது...

News image
Updated On :13 டிசம்பர் 2019, 12:05 pm

டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் சென்னையில் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறவுள்ளது. 18-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஆட்டமும், 22-இல் கட்டாக்கில் மூன்றாவது ஆட்டமும் நடக்கிறது.

ஒருநாள் தொடர் குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான அனில் கும்ப்ளே, ஒரு பேட்டியில் கூறியதாவது:

சவாலான மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களிடம் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கவேண்டும். அவர்கள் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். ஆடுகளமும் அதற்குச் சாதகமாக இருக்கும். 

ஸ்ரேயஸ் ஐயரின் திறமையை நாம் பார்த்துள்ளோம். அவர் நாளுக்கு நாள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவர் 4-ம் நிலை வீரராகக் களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.