மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 15.50 கோடிக்குத் தேர்வு: ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் புதிய சாதனை!

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸைத் தேர்வு செய்ய தில்லி, ஆர்சிபி அணிகள் போட்டியிட்டன. கடைசியில்..

News image
Updated On :19 டிசம்பர் 2019, 10:47 am

DIN

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

ஏலத்தில் முதல் வீரராக ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் இடம்பெற்றார். அவருடைய அடிப்படை விலை - ரூ. 2 கோடி. அதே தொகைக்கு மும்பை அணி அவரை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த இயன் மார்க்னைத் தேர்வு செய்ய கொல்கத்தாவும் தில்லியும் போட்டியிட்டன. கடைசியில் ரூ. 5.25 கோடிக்கு மார்கனைத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. 

ராபின் உத்தப்பாவை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. டெஸ்ட் வீரர்களான ஹனுமா விஹாரி, புஜாரா ஆகிய இருவரையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 

இங்கிலாந்து தொடக்க வீரர் கிறிஸ் லின்னை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்தது தில்லி அணி. 

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்சைத் தேர்வு செய்ய ஆர்சிபி, கேகேஆர் அணிகள் போட்டியிட்டன. கடைசியில் ஆர்சிபி அணி ரூ. 4.40 கோடிக்குத் தேர்வு செய்தது. 

மேக்ஸ்வெல்லைத் தேர்வு செய்ய பஞ்சாப், தில்லி அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. கடைசியில், ரூ. 10.75 கோடிக்கு மேக்ஸ்வெல்லைத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. கடந்த வருடம் மேக்ஸ்வெல்லை தில்லி அணி, ரூ. 9 கோடிக்குத் தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸைத் தேர்வு செய்ய தில்லி, ஆர்சிபி அணிகள் போட்டியிட்டன. கடைசியில், நம்பமுடியாத அளவுக்கு ரூ. 15.50 கோடிக்கு கொல்கத்தா அணி தேர்வு செய்தது. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வெளிநாட்டு வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் கம்மின்ஸ். 2017-ல் புணே அணி, பென் ஸ்டோக்ஸை ரூ. 14.50 கோடிக்குத் தேர்வு செய்தது. அந்தச் சாதனையை கம்மின்ஸ் முறியடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.