தோனியாலும் ஆட முடியாத கடினமான பிட்ச் என ஆஸி. அதிரடி வீரர் மேக்ஸ்வெல், விசாகப்பட்டினம் மைதானத்தை பற்றி கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. கடைசியாக ஆடிய தோனி, 37 பந்துகளில் 29 ரன்களையே சேர்த்தார். இது விமர்சனத்துக்கு உள்ளானது.
பிட்ச்சின் தன்மையால் பந்து தாழ்வாக, மெதுவாக சென்றதால் பேட்ஸ்மேன்கள் ஆட திணறினர். விக்கெட் விழாமல் இருப்பதற்காக சஹலுடன் இணைந்து மெதுவாக ஆடினார் தோனி.
இதுதொடர்பாக மேக்ஸ்வெல் கூறியதாவது:
இதுபோன்ற பிட்ச்களில் அவ்வளவு தான் ரன்களை எடுக்க முடியும். பந்து மிகவும் தாழ்வாக வந்ததால், தோனியால் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது. அவரது ஆட்டத்தில் எந்த தவறும் இல்லை.
ஆட்டத்தின் இறுதியில் சிறப்பாக ஆடுவதில் உலகிலேயே வல்லவரான தோனியே இதில் ஆடுவதற்கு சிரமப்பட்டார். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் குறிப்பாக நாதன் நைல் சிறப்பாக ஆடி, இந்திய அணியைக் கட்டுப்படுத்தினார்.
இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலகக் கோப்பை அணியில் இடம் பெறலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போளூரில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
உயர்வுக்கான பாதை உயர்கல்வி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

