கோலியின் கடின உழைப்புக்கும், விடா முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது: சச்சின் பாராட்டு

அஸ்வின், புஜாரா மற்றும் கெய்ஃப் உள்ளிட்ட உலகளவிலான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து விராட் கோலிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 
கோலியின் கடின உழைப்புக்கும், விடா முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது: சச்சின் பாராட்டு
Updated on
1 min read

2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டன. அவற்றில் 3 உயரிய விருதுகளான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சாபர்ஸ் விருது, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது மற்றும் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருது ஆகியவற்றுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்தார். 

இதுகுறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், விராட் கோலியின் கடின உழைப்புக்கும், விடா முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐசிசி-யின் ஹாட்ரிக் விருதுகளை வென்றதற்கு பாராட்டுகள். உனது சாதனைகள் பெருமைப்பட வைக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அஸ்வின், புஜாரா மற்றும் கெய்ஃப் உள்ளிட்ட உலகளவிலான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து விராட் கோலிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com