பாண்டியா, ராகுல் விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் டிராவிட் கூறியதை ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ பதிவிட்டுள்ளது. அதன்படி, ராகுல் டிராவிட் பேசியதாவது,
"ராகுல், பாண்டியா இருவரும் தங்களது திறனை இதுவரை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இந்த சம்பவம், அவர்களது செயல்பாட்டில் வெளிப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்களது திறனின் உச்சத்தை தொட்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அதனை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு இந்த நிகழ்வு ஊக்கமாக அமையலாம்.
இருவருக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் நான் பயிற்சி அளித்துள்ளேன். இந்த நேர்காணல், அவர்களை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது என்று எனக்கு தோன்றவில்லை. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர்கள், நிச்சயம் இதிலிருந்து வலிமையாக மீண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் அப்படி வலிமையாக மீண்டு வந்தால், நிச்சயம் முன்மாதிரிகளாக விளங்குவார்கள்.
நான் அந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்கவில்லை. அதில் ஒரு சில பகுதிகளை மட்டுமே நான் பார்த்தேன். ஒரு கட்டத்தில், அவர்களே இதுகுறித்து வருத்தம் அடைந்துள்ளனர்.
இந்தியாவுக்காக விளையாடும் போது, பொதுப்பார்வை மற்றும் அதன் மீதான கருத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். காரணம், அது பல பேருக்கு முற்றிலும் பொருத்தமற்ற வகையில் அமையும். அதேசமயம், இதுபோன்ற நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெறும் என்பதையும் நாம் உணரவேண்டும்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் தவறு செய்வார்கள். அதிலிருந்து பாடம் கற்று, கட்டமைத்து கொள்வதன் ஒரு அங்கம் தான் அது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.வி. பிரணதானம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடை
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

கட்சியை தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்தவா் முதல்வா் ஜோசப் விஜய்!

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு பாஜக, தோ்தல் ஆணையமே காரணம்: மீனாட்சி நடராஜன் தாக்கு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




