நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை!

இதுபோல வேறு எந்த ஒருநாள் ஆட்டத்திலும் முதல் ஐந்து இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும்...
நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை!
Published on
Updated on
1 min read

முன்வரிசை, நடுவரிசை வீரர்களிடம் ஓர் அணி என்ன எதிர்பார்க்கும்?

ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகாமல் ஓரளவு 30, 40 ரன்களாவது எடுத்து அணிக்கு உதவவேண்டும் என்பதுதான். அதை இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று நிகழ்த்தி சாதனை செய்துள்ளார்கள்.

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. முதல் ஐந்து இந்திய பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்கள்:

ரோஹித் சர்மா 87
ஷிகர் தவன் 66
விராட் கோலி 43
ராயுடு 47
தோனி 48*

இதுபோல வேறு எந்த ஒருநாள் ஆட்டத்திலும் முதல் ஐந்து இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் 40 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் இதுபோல நடைபெறுவது இது 10-வது முறை. இந்திய பேட்ஸ்மேன்களின் இந்தப் பங்களிப்பு அணியின் வெற்றிக்கு உதவுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com