தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நடுவருடன் வாக்குவாதம்: கோலிக்கு 25% அபராதம் 

ஆப்கனுடனான போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு ஆட்ட ஊதியத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2019, 4:42 pm IST

லண்டன்: ஆப்கனுடனான போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு ஆட்ட ஊதியத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தின் சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் சனிக்கிழமையன்று நடந்த 28வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்கம் முதலே தடுமாறிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.  2010ம் ஆண்டுக்கு பிறகு  சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்து 50 ஓவர்களை முழுமையாக ஆடி முடித்த ஆட்டங்களில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் பேட்டிங் செய்த பொழுது, முகமது சமி வீசிய பந்தில், டி.ஆர்.எஸ். முறையில் எல்.பி.டபிள்யூ. அவுட் கேட்டு விராட் கோலி நடுவரிடம் முறையிட்டார்.  ஆனால் அந்த பந்து ஸ்டம்பில் படாமல் மயிரிழையில் விலகிச் சென்றுள்ளது  டி.ஆர்.எஸ். முறையில் தெரிந்தது. 

ஆனால் பின்னர் நடுவருடன் இதுகுறித்து உரையாடிக் கொண்டிருந்த கோலி பின்னர் இரு கைகளையும் கூப்பியபடி நடுவரிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.  இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு ஆட்ட ஊதியத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குகுறிப்பில் போட்டிக்கான ஐ.சி.சி.யின் நடத்தை விதி 1 மற்றும் 2.1 ஐ மீறும் செயலில் கோலி ஈடுபட்டு உள்ளார். எனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.