2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் 5 ஜாம்பவான்கள் விடைபெறுகின்றனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் 30 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 14-ஆம் தேதி வரை உலகக் கோப்பை போட்டி நடக்கிறது. இதில் மொத்தம் 10 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.
ஒவ்வொரு நாடும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளன. இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,
இந்தியா, பாகிஸ்தான், உள்ளிட்டவை பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதற்கிடையே தற்போது ஜாம்பவான்களாக கோலோச்சி வரும் நட்சத்திர வீரர்கள் 5 பேர் இந்த உலகக் கோப்பையுடன் விடைபெறுகின்றனர்.இதில் 3 பேர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.