புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு: சியேட் விருதுகள் அறிவிப்பு

சியேட் கிரிக்கெட் விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :14 மே 2019, 9:40 am

Raghavendran

சியேட் கிரிக்கெட் விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த மொஹிந்தர் அமர்நாத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதை லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் வழங்கினார். 

Story image

சேத்தேஷ்வர் புஜாராவுக்கு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதும், ரோஹித் ஷர்மாவுக்கு சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதும் வழங்கப்பட்டது. ஸ்மிருதி மந்தானா சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார். 

இந்நிலையில், சிறந்த வீரர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகிய இரு விருதுகள் விராட் கோலிக்கு வழங்கப்பட்டன. 

Story image

சிறந்த பந்துவீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு செய்யப்பட்டார். டி20 வீரருக்கான விருது ஆரோன் ஃபிஞ்ச்-க்கு வழங்கப்பட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரராக குல்தீப் யாதவ் மற்றும் டி20 பந்துவீச்சாளராக ரஷீத் கான் ஆகியோர் விருது பெற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.