ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றிபெற்ற முதல் அணி எனும் அரிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.

News image
Updated On :24 நவம்பர் 2019, 2:16 pm IST

கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இஷாந்த் சா்மா 5, உமேஷ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது. விராட் கோலி 136, ரஹானே 51 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச தரப்பில் அல் அமீன் 3-85, எபாதத் 3-91 விக்கெட்டுகள் எடுத்தனர்.

241 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. பின்னா் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் 5, இஷாந்த் சா்மா 4-விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றிபெற்ற முதல் அணி எனும் அரிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.