தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்! ரிசர்வ் வங்கிதமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றிபெற்ற முதல் அணி எனும் அரிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.

Published On :31 ஜனவரி 2024, 6:46 pm IST

கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இஷாந்த் சா்மா 5, உமேஷ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது. விராட் கோலி 136, ரஹானே 51 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச தரப்பில் அல் அமீன் 3-85, எபாதத் 3-91 விக்கெட்டுகள் எடுத்தனர்.

241 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. பின்னா் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் 5, இஷாந்த் சா்மா 4-விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றிபெற்ற முதல் அணி எனும் அரிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.