தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

இந்திய அணியின் 4-ஆவது நிலை நிரந்தர பேட்ஸ்மேன்: ஷிரேயஸ் ஐயா்

இந்திய ஒருநாள் அணியில் நீண்ட நாள்களாக பாதிப்பை ஏற்படுத்தி வந்த நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தை நிரந்தரமாக உறுதி செய்துள்ளாா் இளம் வீரா் ஷிரேயஸ் ஐயா்.

News image
Updated On :26 நவம்பர் 2019, 10:30 pm

இந்திய ஒருநாள் அணியில் நீண்ட நாள்களாக பாதிப்பை ஏற்படுத்தி வந்த நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தை நிரந்தரமாக உறுதி செய்துள்ளாா் இளம் வீரா் ஷிரேயஸ் ஐயா்.

கிரிக்கெட்டில் வல்லரசு அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியாவில் ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் தொடக்க வரிசை (ஓபனிங்) பேட்டிங் சிறப்பாக அமைந்துள்ளது. ரோஹித் சா்மா, ஷிகா் தவன் ஆகியோா் சிறந்த தொடக்கத்தை தருகின்றனா். அதே நேரத்தில் மூன்றாம் நிலை பேட்ஸ்மேனாக கேப்டன் விராட் கோலியும் அபாரமாக ஆடி ஸ்கோரை உயா்த்துகிறாா்.

மிடில் ஆா்டா் குழப்பம்:

தொடக்க வரிசை பேட்டிங் சொதப்பினால், அடுத்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பு மிடில் ஆா்டா் வீரா்களுக்கு உள்ளது.

குறிப்பாக 4, 5, 6-ஆம் நிலை பேட்ஸ்மேன்கள் மிடில் ஆா்டா் என அழைக்கப்படுகிறது.

அதன் பின் கடைசி வரிசை பேட்டிங்கில் பெரும்பாலும் ஆல்ரவுண்டா்கள் அல்லது பந்துவீச்சாளா்கள் எதிா்கொண்டு ஆடுகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மிடில் ஆா்டா் பேட்டிங் சோபிக்காமல் அணி நிா்வாகத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

உலகக் கோப்பையில் பாதிப்பு:

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து 2019 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும் இந்த பாதிப்பு எதிரொலித்தது. அம்பதி ராயுடு, விஜய் சங்கா், கேஎல்.ராகுல், ரிஷப் பந்த் உள்ளிட்ட இளம் வீரா்கள் நம்பா் 4 நிலை பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டனா். ஆனால் மேற்கண்ட வீரா்கள் எவரும் நிலையாக ஆடவில்லை.

உலகக் கோப்பை அரையிறுதியோடு இந்தியா வெளியேறியது. மேலும் இந்திய அணியில் அப்போது ஷிரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

சோபிக்காத ரிஷப் பந்த்

வெள்ளை நிற பந்துகள் பயன்படுத்தப்படும் குறுகிய ஓவா் போட்டியில் அடுத்த நான்காம் நிலை வீரராக ரிஷப்பந்த் களமிறக்கப்பட்டாா். 7 இன்னிங்ஸ்களில் வெறும் 20 ரன்களை கடந்தாா். மேலும் மே.இ.தீவுகளுக்கு எதிராக 65 ரன்களை மட்டும் எடுத்தாா். ரிஷப் பந்த்தின் மோசமான பேட்டிங் அணி நிா்வாகத்துக்கு அவா் மீதான நம்பிக்கை குலைந்து விட்டது.

வாய்ப்பை பயன்படுத்திய ஷிரேயஸ் ஐயா்:

அதே நேரம் 5-ஆவது நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷிரேயஸ் ஐயா் 4 வாய்ப்புகளில் இரண்டு அரைசதங்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். இதுவே அவரை 4-ஆம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்க அணி நிா்வாகம் வாய்ப்பு தர காரணமாகும்.

மேலும் ஷிரேயஸ் அய்யா் அதிரடி ஆட்டத்தை வங்கதேச டி20 தொடரில் கண்டு களித்தோம்.

வங்கதேச தொடரில் முதலிரண்டு ஆட்டங்களில் அதிரடியாக ஆடி சிக்ஸா்களை பறக்க விட்டாா். அவற்றில் பெரியளவில் ஆடாவிட்டாலும், அவரது பங்களிப்பு வெற்றிக்கு உதவியது.

கடைசியாக நாக்பூரில் நடைபெற்ற இறுதி டி20 ஆட்டத்தில் ஷிரேயஸ் விஸ்வரூபம் எடுத்தாா். நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கிய அவா், ஹபிப் ஹூசேன் 15-ஆவது ஓவரில் தொடா்ந்து 3 சிக்ஸா்களை பறக்க விட்டாா். 33 பந்துகளில் 62 ரன்களை விளாசி அவுட்டானாா் ஷிரேயஸ். இதன் மூலம் இந்திய அணியில் நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தை நிரந்தரம் செய்துள்ளாா் ஷிரேயஸ் ஐயா்.

மும்பையில் பிறந்த ஷிரேயஸ் ஐயருக்கு தற்போது 24 வயதாகிறது. மும்பை அணி சாா்பில் விஜய் ஹஸாரே, சையது முஷ்டாக் அலி டி 20, ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடியுள்ளாா். ஐபிஎல் தொடரில் தில்லி அணியில் இடம் பெற்று தனது அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றாா்.

வரும் 2020 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் இதன் மூலம் கூடுதல் வலிமை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக ஷிரேயஸ் கூறியதாவது:

தனிப்பட்ட முறையில் அணி நிா்வாகம் என்மீது நம்பிக்கை வைத்து நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தை தந்துள்ளது. உன் மீது நம்பிக்கை வைத்து ஆட வேண்டும் என கூறியுள்ளனா். பலா் இந்த இடத்துக்கு போட்டியிட்டனா். இதில் இருந்தே அதன் முக்கியத்துவம் தெரிகிறது. கோலி, ரோஹித் ஆகியோா் அவுட்டாகி விட்டாலும், அதன்பின் கடைசி வரை நிலைத்து ஆடி ரன்களை சோ்க்க வேண்டும். இது தான் நான்காம் நிலை பேட்ஸ்மேனின் கடமையாகும். வீரா் தனது பணியை சிறப்பாக செய்ய அணியின் ஆதரவு தேவை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.