உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ரஷியாவின் உலன் உடேவில் அக். 3-ம் தேதி தொடங்கியது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி. இன்று நடைபெற்ற 48 கிலோ எடை பிரிவு காலிறுதிச்சுற்றில் வட கொரியாவைச் சேர்ந்த கிம் ஹயாங் மி-யை எதிர்கொண்டார் இந்தியாவின் மஞ்சு ராணி. இதில் 4-1 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு அவர் முன்னேறியுள்ளார்.