மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரஞ்சி இறுதிப் போட்டியில் விளையாடுவதால் பலன் எதுவும் இல்லையா?: தேர்வுக்குழுவினரிடம் கேள்வி எழுப்பும் வீரர்!

தற்போது நடைபெற்று வரும் துலீப் கோப்பைப் போட்டிக்கு ஷெல்டன் ஜாக்சன் தேர்வாகவில்லை. எனினும்...

News image
Updated On :5 செப்டம்பர் 2019, 10:04 am

எழில்

2012-13 முதல் செளராஷ்டிரா அணி மூன்று தடவை ரஞ்சி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. எனினும் இந்திய ஏ அணிக்கு செளராஷ்டிர அணி வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் செளராஷ்டிர வீரர் ஷெல்டன் ஜாக்சன்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது: ரஞ்சி இறுதிப் போட்டிக்கு செளராஷ்டிர அணி தகுதி பெற்றது. எனினும் இந்திய ஏ அணி விளையாடும் தொடர்களில் செளராஷ்டிர வீரர்கள் இடம்பெறவில்லை. எனவே ரஞ்சி இறுதிப் போட்டியில் விளையாடுவதால் பலன் எதுவும் இல்லையா அல்லது சிறிய அணிகளின் சாதனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லையா? கடந்த 5 வருடங்களில் செளராஷ்டிரா அணி மூன்று தடவை ரஞ்சி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால் அதனால் எந்த வீரருக்கும் பலனில்லை. இதைக் கேள்வி கேட்கக்கூடாது என நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன். ஆனால் இதற்கான காரணத்தைக் கேட்டு நாங்கள் எதில் பின்தங்குகிறோம் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். இல்லாவிட்டால் எங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவு பெற்றுவிடும். இந்த விஷயத்தில் தேர்வுக்குழுவினர் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். 

தற்போது நடைபெற்று வரும் துலீப் கோப்பைப் போட்டிக்கு ஷெல்டன் ஜாக்சன் தேர்வாகவில்லை. எனினும் செளராஷ்டிர அணியைச் சேர்ந்த தர்மேந்திரசிங் ஜடேஜா, உனாட்கட் போன்றோர் துலீப் கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார்கள். எனினும் இருவரும் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியில் தேர்வாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.