ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஆதாயம் தரும் பதவி: கங்குலிக்குப் புதிய உத்தரவு!

ஐபிஎல் அல்லது பிசிசிஐ என இரண்டில் ஏதேனும் ஒரு பதவியை மட்டும் செளரவ் கங்குலி தேர்வு செய்யவேண்டும் என்று பிசிசிஐ நெறிமுறைகளுக்கான அதிகாரி கூறியுள்ளார். 

News image
Updated On :13 செப்டம்பர் 2019, 10:17 am

எழில்

ஐபிஎல் அல்லது பிசிசிஐ என இரண்டில் ஏதேனும் ஒரு பதவியை மட்டும் செளரவ் கங்குலி தேர்வு செய்யவேண்டும் என்று பிசிசிஐ நெறிமுறைகளுக்கான அதிகாரி கூறியுள்ளார். 

பிசிசிஐ-யின் கிரிக்கெட் அறிவுரைக் குழு (சிஏசி) உறுப்பினர்களாக கங்குலி மற்றும் லஷ்மண் அங்கம் வகிக்கின்றனர். அதேவேளையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கான ஆலோசகர்களாக முறையே லஷ்மண், கங்குலி பொறுப்பு வகிக்கின்றனர். ஒரே நேரத்தில் இவ்வாறு இரு பொறுப்புகளில் இருப்பது ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் அங்கம் வகிப்பதாக பார்க்கப்படுமென பிசிசிஐ கூறியுள்ளது. ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் சச்சின், பிசிசிஐயின் கிரிக்கெட் அறிவுரைக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவர் விவகாரத்தில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவிக்கான கேள்வி எழவில்லை. ஆனால், லஷ்மண் மற்றும் கங்குலி விவகாரத்தில் அத்தகைய கேள்வி எழுந்துள்ளது. எனவே, ஐபிஎல் அல்லது பிசிசிஐ அந்த இரண்டில் ஏதேனும் ஒரு பதவியை மட்டும் அவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்கிற நிலைமை உருவாகியுள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ நெறிமுறைகளுக்கான அதிகாரி டி.கே.ஜெயின் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிசிசிஐ-யின் கிரிக்கெட் அறிவுரைக் குழுவில் உள்ள கங்குலி ஐபிஎல்-லிலும் பொறுப்பு வகிப்பது ஆதாயம் தருவதாக உள்ளது. இதுதொடர்பான கங்குலியின் விளக்கம், ராஜிநாமா அறிவிப்பாகவே கருதப்படும். எனவே ஐபிஎல் பொறுப்பில் உள்ள பதவி, 2019 மே மாதத்துடன் முடிவுக்கு வரவேண்டும். தற்போதைய நிலையில் ஆதாயம் தரும் பதவியை அவர் வகிப்பதாகவே உள்ளது. ஆதாயம் தரும் பதவியை விட்டு கங்குலி விலகவேண்டும். ஒரு பதவிக்கு மேல் அவர் பொறுப்பேற்கக்கூடாது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.