விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தோனி குறித்த அந்த ட்வீட், எனக்கொரு பாடம்: விராட் கோலி ஒப்புதல்!

வீட்டில் அமர்ந்துகொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டேன். அது செய்தியாகிவிட்டது...

News image
Updated On :14 செப்டம்பர் 2019, 4:32 pm IST

இரு நாள்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டமொன்றில் தோனியுடன் எடுத்த புகைப்படத்தை ட்வீட் செய்தார் விராட் கோலி. இந்த ஆட்டத்தை என்னால் மறக்கமுடியாது. விசேஷமான இரவு. இவர் (தோனி), உடற்தகுதிக்கான சோதனை போல என்னை ஓடவைத்தார் என்று ட்வீட் செய்தார் கோலி. 

இந்த ஒரு ட்வீட், மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தோனி ஓய்வு பெறப்போகிறார். அதனால்தான் புகழுரையாக இந்த ட்வீட்டை கோலி வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் கருதினார்கள்.

அந்த ட்வீட் குறித்து விராட் கோலி கூறியுள்ளதாவது: 

அந்த ட்வீட்டை எந்தக் காரணத்துக்காகவும் வெளியிடவில்லை. வீட்டில் அமர்ந்துகொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டேன். அது செய்தியாகிவிட்டது. எனக்கு இது ஒரு பாடம் என நினைக்கிறேன். நான் எண்ணுவது போல உலகமும் எண்ணாது என்பதைக் கற்றுக்கொண்டேன். அந்தப் படம், ஓய்வுக்கான புகழுரையாக இருக்கும் எனக் கனவிலும் எண்ணவில்லை. என்னுடைய மற்ற ஆட்டங்கள் போல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த டி20 ஆட்டம் குறித்து நான் அதிகம் பேசியதில்லை. அந்த ஆட்டத்தை நான் இன்றும் நினைவில் வைத்துள்ளேன். அதைப் பற்றி பேசியதில்லை என்பதால் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டேன். ஆனால் மக்கள் அதை வேறு மாதிரி புரிந்துகொண்டுவிட்டார்கள். அதில் துளியும் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.