ஐசிசி தரவரிசையில் 115 ரேட்டிங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 108 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.
இரு அணிகளும் அக்டோபர் 2 முதல் தொடங்கவுள்ள 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளன.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்றால் பெரிய அபாயம் ஒன்று காத்திருக்கிறது.
டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தால் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் தான் இருக்கும். பிரச்னையில்லை.
ஆனால் 0-1 என்கிற அளவில் டெஸ்ட் தொடரில் தோற்றாலும் முதலிடத்தை இழந்துவிடும் இந்திய அணி. அதேபோல 0-2, 0-3 என்றாலும் முதலிடம் இந்திய அணியின் வசம் இருக்காது. பதிலாக, டெஸ்ட் தொடரை வெல்லும் தென் ஆப்பிரிக்க அணி, ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துவிடும். தொடரில் தோற்ற இந்திய அணி 2-ம் இடத்துக்கு இறங்கிவிடும். இப்படியொரு அபாயத்துடன் தான் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
எனவே முதலிடத்தைத் தக்கவைக்கவேண்டுமென்றால் டெஸ்ட் தொடரை வென்றே ஆகவேண்டும், அல்லது டிராவாவது செய்யவேண்டும் என்கிற நெருக்கடி இந்திய அணிக்குத் தற்போது ஏற்பட்டுள்ளது.
சவாலை வென்று காண்பிப்பாரா விராட் கோலி?