விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

5 ஆயிரம் ரன்களைக் கடந்து லாரா சாதனையை சமன் செய்த ஷிகர் தவன்!

இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் 5 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளார்.

News image
Updated On :23 ஜனவரி 2019, 11:46 am IST

இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் 5 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளார். இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தின்போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

இதன்மூலம் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்தியர்களில் 118 இன்னிங்ஸ்களுடன் 2-ஆம் இடத்தைப் பிடித்தார். 114 இன்னிங்ஸ்களுடன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். 126 இன்னிங்ஸ்களுடன் சௌரவ் கங்குலி 3-ஆவது இடத்தில் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சௌரவ் கங்குலி, க்ரீம் ஸ்மித் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த இடதுகை பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பிரையன் லாரா உடன் ஷிகர் தவன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.  

ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள் பட்டியலில் 101 இன்னிங்ஸ்களுடன் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.