மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பங்கால் அபாரம்

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரரும், ஆசிய சாம்பியனுமான அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

News image
Updated On :14 செப்டம்பர் 2019, 7:24 pm

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரரும், ஆசிய சாம்பியனுமான அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 50-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவும் இப்போட்டிக்கு வலுவான அணியை அனுப்பியுள்ளது. ஆசியப் போட்டி சாம்பியன் அமித் பங்கால் 52 கிலோ பிரிவில் சீன தைபேயின் டு போ வெயை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
23 வயதான அமித் தொடக்கம் முதலே ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி சரமாரியாக குத்துகளை விட்டார். முதல் சுற்றில் அமித்துக்கு பை வழங்கப்பட்டது.
57-63 கிலோ பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கெளஷிக் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் டச்சு வீரர் லாக்ரûஸ வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.