உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பங்கால் அபாரம்

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரரும், ஆசிய சாம்பியனுமான அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பங்கால் அபாரம்

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரரும், ஆசிய சாம்பியனுமான அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 50-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவும் இப்போட்டிக்கு வலுவான அணியை அனுப்பியுள்ளது. ஆசியப் போட்டி சாம்பியன் அமித் பங்கால் 52 கிலோ பிரிவில் சீன தைபேயின் டு போ வெயை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
23 வயதான அமித் தொடக்கம் முதலே ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி சரமாரியாக குத்துகளை விட்டார். முதல் சுற்றில் அமித்துக்கு பை வழங்கப்பட்டது.
57-63 கிலோ பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கெளஷிக் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் டச்சு வீரர் லாக்ரûஸ வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com